நுவரெலியா

இலங்கையின் தேயிலை பயிரிடும் மாவட்டங்களில் மிகவும் பிரபல்யமான நுவரெலியா மாவட்டம், மிகவும் கரடுமுரடான மற்றும் மலைப்பாங்கான, அதிக சராசரி உயரத்துடன் உள்ள மாவட்டமாகும். குறிப்பாக இங்கு வீசும் காற்று மிகவும் குளிர்ச்சியாகவும்,  யூகலிப்டஸ் மற்றும் காட்டு புதினாவின் வாசனையுடனும் வீசுகிறது. பெப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில்  உள்ள வறண்ட காலத்தைத் தவிர, மிதமான மழை வருடம் முழுவதும் பெய்யும். இரவுகளில் குளிர்ச்சியாகவும் சில சமயங்களில் உறைபனியாகவும் இருக்கும். இந்த தனித்துவமான காலநிலை, இப்பகுதியின் நிலப்பரப்புடன் இணைந்து, தேயிலையை உற்பத்தி செய்கின்கிறது. இது உலகின் மிகச்சிறந்த தேயிலைகளில் ஒன்றாக  சுவை பரிசோதிப்பவர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா தேயிலைக்கான சுவையாளர்களின் குறிப்புகள்

நுவரெலியா  – ” நளினமான நறுமணமிக்கது” “Delicately fragrant”

நுவரெலியாவின் உயரமான மலைப் பிரதேசமும் குறைந்த வெப்பநிலையுடனான காலநிலையும் இணைந்து, மிகவும்  நேர்த்தியான தேயிலையினை உருவாக்குகிறது. நாம் பெரும் ஓவ்வொரு தேநீர் கோப்பையில் உள்ள அனைத்து வகையான சிலோன் தேயிலைகளிலும் (Ceylon tea)  மிக மிருதுவானது (வெளிர் நிறமானது), பொன் நிறமும், மென்மையான நறுமணமும் கொண்டதும் ஆகும். இவற்றுள் பெரும்பாலும் முழு-இலை ஆரஞ்சு பெக்கோ (whole-leaf Orange Pekoe (OP)) மற்றும் உடைந்த ஆரஞ்சு பெக்கோ (Broken Orange Pekoe (BOP)) ஆகியவை அடங்கும்.

நுவரெலியா மற்றும் தேயிலையின் வரலாறு

நுவரெலியா வரலாற்று ரீதியாக ஒப்பீட்டளவில் ஒரு புதியதொரு பிரதேசமாகும்.   மாவட்டம் அதன் பெயரைப் பெற்ற நகரம் கடல் மட்டத்திலிருந்து 1,868 மீற்றர் (6,128 அடி) உயரத்தில், இலங்கையின் மிக உயரமான மலையான பிதுருதலாகலாவின் நிழலின் கீழ் மேட்டு நிலமொன்றில் அமைந்துள்ளது. 1818 ஆம் ஆண்டில் ஆங்கிலேயரான ஒரு ஆய்வாளரால் கண்டுபிடிக்கப்பட்டபோது, இந்த அழகிய மேட்டு நிலமானது, அதைச் சுற்றியுள்ள அடர்த்தியான காடுகளால் ஆன நிலப்பரப்பு காரணமாக பழங்காலத்தில் மக்கள் அணுக முடியாததாக இருந்தது. அதன் அற்புதமான இயற்கைக்காட்சி மற்றும் வெப்பநிலையால் ஈர்க்கப்பட்ட அக்கால பிரித்தானிய ஆளுநராக இருந்த சார் எட்வர்ட் பார்ன்ஸ், ஆண்டின் வெப்பமான மற்றும் ஆரோக்கியமற்ற மாதங்களில் சரிசெய்யக்கூடிய ஒரு நாகரீகமான மலைநாட்டு வாசஸ்தலமாக, இந்த இடத்தை அப்போதைய சிலோனின் தலைநகரான கொழும்பை  போன்றதாக மாற்றத் தீர்மானித்தார். தானே ஒரு வீட்டைக் கட்டும் எளிய முயற்சியால் இதைச் சாதித்தார் (இப்போது அது கிராண்ட் ஹோட்டல்) மற்றும் பிரித்தானிய ஆக்கிரமிப்பு காலப்பகுதியில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் ‘நுவரெலியா’ இவ்வாறு, ஒவ்வொரு வருடமும் சில வாரங்களுக்கு, காலனித்துவ கால இலங்கையின் தலைநகராக மாறியது.

1840 களின் முற்பகுதியில், சிலோன் கோப்பியானது, அதுவரை ஐரோப்பியர்களால் அரிதாகவே பரிசீலிக்கப்பட்ட மலைநாட்டின் சில பகுதிகளின் தோட்டங்களாக விரைவாக பரவியது. கண்டிக்கு தெற்கிலும் கிழக்கிலும் இந்த தொலைதூர தோட்டங்களை அமைத்த முன்னோடிகள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்த தனிமையான மனிதர்களாக இருந்தனர்.  நுவரெலியாவை பொறுத்தவரையில் அவர்கள் சந்திப்பதற்கும் மற்றும் பொழுதுபோக்கிற்கான ஒரு பயனுள்ள மற்றும் மையமாக அமைந்துள்ள இடமாக கண்டனர். அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக எழுந்த நகரம் முதலில் பெரும்பாலும் பெண்களற்ற இடமாக இருந்தது. அடிக்கடி வரும் ஆண்களின் நலன்களுக்காக வடிவமைக்கப்பட்டது. மதுபானசாலைகள் மற்றும் விடுதிகள் அதிகரித்தன.  விளையாட்டுப் போட்டிகள் வழமையான நிகழ்வுகளாக மாறின. எனினும், குடியிருப்பு வசதிகள் ஆரம்ப மட்டத்திலேயே இருந்தன.

பின்னர், உற்பத்தி வளர்ச்சியடையும் போது, செல்வமும் அது கொண்டுவந்த நாகரீக வசதிகளும் நுவரெலியாவின் தன்மையை மாற்றியது. தேயிலை தசாப்தத்தின் தொடக்கத்தில், இது ஒரு பண்பான, சற்றே வெட்கித்த சிறிய ஆங்கில நகரமாக மாறியது. ஆங்கிலேயர் காலத்தின் பெரும்பகுதிக்கு இது பெரும்பாலும் ஐரோப்பிய பிரதேசமாகவே இருந்தது. மேலும் நுவரெலியாவின் ஒருசில விடுதிகள் சுதந்திரத்திற்குப் பின்னரும்  சில ஆண்டுகளுக்கு வெள்ளையர்களுக்கு மாத்திரம் திறந்திருக்கும் கொள்கையை பேணிவரும் மட்டத்திற்கு சென்றது.

நுவரெலியாவில் எப்போதும் கோப்பி மலைகளில் சற்று உயரமாக இருந்தது. அடிக்கடி மழை பெய்து பயிர்களை சேதப்படுத்தியது. 1870கள் மற்றும் 80களில் ஏற்பட்ட பெரும் நோய் கோப்பி தொழிலை அழித்து, இலங்கை தோட்டக்காரர்கள் தேயிலைக்கு மாறிய பின்னரே இந்த மாவட்டம் அதன் நிலையை மீண்டும் கண்டது. முந்தைய காலங்களில் புதிய பயிரைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட  பரிசோதனைகளில் அதை வெற்றிகரமாக அங்கு பயிரிடலாம் என்று கண்டறியப்பட்டிருந்தது.  இப்போது, நுவரெலியா தேயிலைக்கு ஏறக்குறைய சரியான காலநிலையை வழங்குகிறது என்பது விரைவில் தெளிவாகியது. 1875 அளவில், முதலாவது பயிர்செய்கைகள் செழிப்பாக வளர்ந்தன. மேலும் நூற்றாண்டின் இறுதியில், நுவரெலியா இலங்கையின் முக்கிய தேயிலை வளரும் மாவட்டங்களில் ஒன்றாக இருந்தது. இது பொதுவாக உலகின் மிகச்சிறந்த தேயிலைகளை உற்பத்தி செய்வதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்தப் பெருமை அன்று முதல் பேணிவரப்பட்டது.

This site is registered on wpml.org as a development site. Switch to a production site key to remove this banner.