உள்ளக கணக்காய்வு பிரிவின் நோக்கங்கள்
உள்ளக கணக்காய்வு பிரிவின் நோக்கம், முக்கிய பங்குதாரர்களான இலங்கை அரசாங்கம், தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள், தேயிலை தோட்ட உரிமையாளர்கள், தேயிலை வர்த்தகர்கள், தேயிலை கைத்தொழில்துறை தொழிலாளர்கள் மற்றும் இலங்கையில் உள்ள பொதுமக்கள் ஆகியோரின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதற்காக அதன் நிதி, நிர்வாகம் மற்றும் மனித வளங்களை ஒதுக்குவதற்கு உள்ளக கணக்காய்வு செயற்பாடுகளை திறமையாக செயற்படுத்துவதாகும்.
உள்ளக கணக்காய்வு பிரிவானது, தேயிலை சபை அதன் நோக்கங்களை நிறைவேற்ற ஒரு முறையான, ஒழுக்கமான அணுகுமுறையைக் கொண்டு மதிப்பீடு செய்ய உதவுகிறது மற்றும் இடர் முகாமைத்துவம், கட்டுப்பாடு மற்றும் நிர்வாக செயன்முறைகளின் கீழ்காணும் செயற்திறனை மேம்படுத்த செயற்படுகிறது.
- பயனுள்ள மற்றும் திறமையான தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலக செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடுகள் நியாயமான உத்தரவாதத்தை அளிக்கிறதா என்பதை தீர்மானிக்க.
- பணியாளர்கள் கட்டுப்பாடுகளை அறிந்திருப்பதையும் அவற்றிற்கு இணங்குவதையும் தீர்மானிக்க.
- நிர்வாகத்தால் பயன்படுத்தப்படும் அனைத்து கட்டமைப்பு மற்றும் வளங்கள் தேயிலை சபையின் நோக்கங்கள் மற்றும் உத்தேசிக்கப்பட்ட முடிவுகளை அடைய உதவும்.
- நிறுவனத்தின் நடவடிக்கைகளில் துல்லியம், ஒருமைப்பாடு மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றிற்கு கட்டுப்பாடுகள் நியாயமான உத்தரவாதத்தை அளிக்கின்றனவா என்பதை தீர்மானிக்க.
- தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களின் செயற்பாடுகளில் தொடர்புடைய மற்றும் பிற ஒழுங்குமுறைத் தேவைகளுக்கு இணங்குவதற்கான நியாயமான உத்தரவாதத்தை கட்டுப்பாடுகள் வழங்குகின்றனவா என்பதைத் தீர்மானிக்க.
- நிறுவனத்தின் நோக்கங்களை அடைவதற்கான முயற்சிகளுக்கு வழிகாட்டும் திட்டம் நிறுவப்பட்டு, தெரிவிக்கப்பட வேண்டும்.
- தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகம், சொத்துக்களின் தகவல் முகாமைத்துவம் மற்றும் பணியாற்றும் மொழி, தனியுரிமை மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட கொள்கைகள் மற்றும் நடைமுறைகளுக்கு இணங்க செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.



