கண்டி

“இயற்கைக்காட்சிகளைப் பற்றி நான் அதிகம் எழுதுகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம்,” என்று ஜேம்ஸ் டெய்லர் ஸ்காட்லாந்திற்கு எழுதிய கடிதத்தில் பரிந்துரைத்தார். “ஆனாலும், அதை நீங்கள் பார்க்க முடிந்தால், நான் ஏன் அப்படி எழுதுகிறேன் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்”. சிலோன் தேயிலையின் (Ceylon Tea) முன்னோடியான அவர் தனது தோட்டமான லூல்கந்துறை மற்றும் அதைச் சுற்றியுள்ள ஹெவாஹெட்ட கிராமப்புறங்களில் இருந்த காட்சிகளை விவரித்தார்.

1851 இல் அங்கு வந்ததிலிருந்து, தேயிலை செய்கை பற்றி கற்றுக் கொள்வதற்காக டார்ஜிலிங்கிற்கு அவர் ஒருமுறை மட்டுமே சென்றுள்ளார். இப்பகுதியை அவர் எந்தளவு நேசித்தார் என்றால், அவர் தனது எஞ்சிய வாழ்நாள் முழுவதையும் மத்திய மலைநாட்டின் கிராமப்புறத்தில் கழித்து அங்கு உயிரிழந்து அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்.

அவ்வாறாயின், கண்டி என்பது, தேயிலை பயிர் செய்கையின் அனைத்தும் ஆரம்பித்து வைக்கப்பட்ட மாவட்டமாகும்.

 

கண்டி தேயிலைக்கான சுவையாளர்களின் குறிப்புகள்

கண்டி – “மிகச் சிறந்த தரத்தைக் கொண்டது” 

கண்டியில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைகள் 1,300 மீற்றருக்கு (4000 அடி) மேற்படாமை காரணமாக, “நடுத்தரமாக வளர்ந்தவை” / “mid-grown”  என்று விவரிக்கப்படுகிறது. தோட்டம் அமைந்துள்ள உயரம் மற்றும் பருவக் காற்றிலிருந்து தோட்டம் பாதுகாக்கப்படுகின்றமை காரணமாக இதன் தேயிலை விசேட சுவையைக் கொண்டிருக்கும். இவை அனைத்தும் குறிப்பாக சுவையாக இருக்கும். கண்டி தேயிலைகள் செப்பு நிறத்துடன் ஒரு பிரகாசமான சாயத்தை உற்பத்தி செய்வதுடன், பலமான மற்றும் தீவிர சுமையைக் கொண்டிருக்கும்.

கண்டி தேயிலைகள் செப்பு நிறத்துடன் ஒப்பீட்டளவில் பிரகாசமான உட்செலுத்தலை உற்பத்தி செய்கின்றன. கோப்பையில் மிருதுவானதாக தென்பட்டாலும், அவை சப்ரகமுவ மற்றும் ருஹுனவின் குறைந்த-வளர்ப்பு தயாரிப்புகளைப் போல இல்லாவிட்டாலும், நல்ல வலிமையையும், சிறந்த தன்மையையும் வழங்குகின்றன. பெரும்பாலான கண்டி-மாவட்ட தோட்டங்கள் மலைகளின் மேற்கு சரிவுகளில் அமைந்துள்ளன. எனவே அவற்றின் சுவை ‘மேற்கு தர பருவத்தால்’ பாதிக்கப்படுகிறது. கண்டி தேயிலைகள் செப்பு நிறத்துடன் ஒரு பிரகாசமான சாயத்தை உற்பத்தி செய்வதுடன், சிறந்த தேயிலை உற்பத்தி செய்யப்படுவது ஆண்டின் முதல் காலாண்டில் மாவட்டத்தில் குளிர் காலநிலை காணப்படுகின்ற போதாகும்.

 

கண்டி மற்றும் தேயிலையின் வரலாறு

பண்டைய கால சிங்கள மன்னர்களின் இறுதி இடமான இப்பிரதேசத்துக்கு செங்குத்தான மலைப்பாதைகள் வழியாக மட்டுமே பயணிக்க முடியும். இது வீதிகள் இல்லாத மற்றும் மலைப்பகுதிகள் அடர்ந்த காடுகளாக இருந்த நாட்களில் படையெடுப்பிற்கு பெரும் தடையாக இருந்தது. இத்தகைய அணுக முடியாத தன்மை கண்டி மன்னர்களுக்கு முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலாக வெளிநாட்டு படையெடுப்பாளர்களை எதிர்க்க உதவியது.  அதன் விகாரைகள் மற்றும் மடாலய நூலகங்கள், அதன் கலைகள் மற்றும் கைவினைப்பொருட்கள் மற்றும் நாட்டுப்புற வழிகளில், கண்டி பல நூற்றாண்டுகளாக சிங்கள மக்களின் கலாச்சார பாரம்பரியங்களை பாதுகாத்து வருகிறது. இது பௌத்த மதத்தின் முக்கிய மையமாகவும் இருந்தது: புத்தரின் போதனைகள் முதலில் மாத்தளைக்கு அருகிலுள்ள அலுவிஹாரையில் எழுதப்பட்டன. விசுவாசத்தின் புனிதமான நினைவுச்சின்னம் என்று புகழப்படும் புத்த பகவானின் தந்ததாதுக்கள் எனப்படும் பல் தலைநகரில் உள்ள ஒரு விஹாரையில் தங்க கலசத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டது.  அதன் உரிமையானது இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்குவதாகக் கூறப்படுகிறது. எனவே கண்டி இராச்சியம் 1815 இல் ஆங்கிலேயர்களின் கைகளுக்குச் சென்றபோது, ​​பிற்காலத்தை சோ்ந்தவர்கள் புனித தந்ததாதுக்களை பாதுகாப்பதில் கவனமாக இருந்தார்கள் என்பதுடன், இதனுடன் தொடர்புடைய புகழ்பெற்ற பெரஹரா போன்ற சம்பிரதாயங்களையும் தொடர்ந்து மேற்கொண்டு வந்தடுன், இவை இன்றுவரை தொடர்கின்றன.

கண்டியின் வீழ்ச்சியானது இலங்கையின் முழு மலையகமும் ஆங்கிலேயர்கள் வசம் திறந்து விடப்பட்டது. ராஜ்ஜியத்தின் தலைநகரத்தை, அவர்கள் கண்டி என்றும் பெயரிட்டனர். விரைவில் இப்பகுதியின் பெருநகரமாக கண்டி மாறியது. கோப்பி வர்த்தகம் விரைவில் ஆரம்பிக்கப்பட்ட போது, இந்த ‘மலைநாட்டு தலைநகருக்கு’ மற்றும் பேராதனையில் சமீபத்தில் நிறுவப்பட்ட தாவரவியல் பூங்கா மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு  அருகாமையில் முதல் தோட்டங்களை தாபிப்பது சுயமாக இடம்பெற்றது. தேயிலைக்கும் இது இவ்வாறே இடம்பெற்றது: அனைத்து ஆரம்பகால தேயிலை தோட்டங்களைப் போலவே லூல்கந்தூரவும் முதலில் ஒரு கோப்பி  தோட்டமாக இருந்தது. ஆனாலும் இது முதலாவது இடமல்ல.

தேயிலை பயிரிடும் கண்டி மாவட்டம் இலங்கையின் மத்திய மாகாணத்தின் ஒரு பகுதியாகும். அதன் தலைநகரம் ஒப்பீட்டளவில் தாழ்வான பள்ளத்தாக்கில் அமைந்திருந்தாலும், தோட்டங்கள் சூழவுள்ள மலைகளைச் சுற்றி அமைந்துள்ளன – நிலம்பே, ஹந்தானை, புஸ்ஸல்லாவ, கம்பளை மற்றும் ஹெவாஹெட்ட ஆகியன அவையாகும். இவை மத்திய தெற்குப் பகுதியில் காணப்படுவதைப் போன்று உயரமானதாக இல்லை. எனவே கண்டி பிரதேசத்த்தின் தேயிலை ‘நடுத்தரமாக வளர்ந்தது’/ “Mid Grown” என்று விவரிக்கப்படுகிறது. பயிர்செய்கையின் உயரம் 650 மீற்றல் முதல் 1,300 மீற்றர் (2,000-4,000 அடி) வரை இருக்கும்.

கண்டி ஒப்பீட்டு ரீதியாக பாதுகாப்பானதாக உள்ள போதும், பிரதேச வானிலை பெரும்பாலும் தென்மேற்கு பருவக்காற்று மூலம் பாதிக்கப்படுகிறது. மலைப்பாதைகளில் காற்று வலுவாக வீசுகிறது. பல தோட்டங்களும், காற்று குறைவாக இருக்கும் பள்ளத்தாக்குகளில் கொத்தணியாக உள்ளன. மேலும் அவை உற்பத்தி செய்யும் தேயிலை மற்ற பிராந்தியங்களில் விளையும் தேயிலையை விட வலுவானதாகவும் கடும் நிறமாகவும் இருக்கும்.

This site is registered on wpml.org as a development site. Switch to a production site key to remove this banner.