ரஷ்யா கூட்டமைப்பை அடுத்ததாக, பாரம்பரிய சிலோன் தேயிலைக்கான 2வது பாரிய சந்தையாக ஈரான் உள்ளது. மேற்கு உலக நாடுகள் மற்றும் அமெரிக்கா, ஈரான் மீது விதிக்கப்பட்ட கடுமையான பொருளாதார தடைகளால் இந்த நிலை தற்காலிகமாக மாறியுள்ளது. எவ்வாறாயினும், பொருளாதாரத் தடைகள் விரைவில் நீக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், ஈரான் மீண்டும் உயர் மட்டத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொழும்பு ஏலத்தில் குறைந்த வளர்ந்த நுனித் தேயிலையை (Low Grown Tippy Teas ) ஈரான் மிக்க விருப்பத்துடன் கொள்வனவு செய்வதுடன், சிலோன் தேயிலை சந்தையில் ஏறக்குறைய 50% பங்குடன் ஆதிக்கம் செலுத்துகிறது.
ஈரானில் உள்ள சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வி அமைச்சகத்தின் கீழ் வரும் ஈரானிய உணவு மற்றும் மருந்து அதிகாரசபை, இறக்குமதி செய்யப்பட்ட உணவு மற்றும் பானங்களிலிருந்து தங்கள் நுகர்வோரைப் பாதுகாப்பதில் அதிக அக்கறை மற்றும் உணர்வுப்பூர்வமான தன்மையை அதிகரித்துள்ளது. அதன்கமைய, ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இறுதி உற்பத்தியின் தரம் குறித்து ஈரானிய அதிகாரிகள் தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளின் அரச அமைப்புகளிடம் இருந்து உத்தரவாதத்தை கோருகின்றனர். இந்தத் தேவைக்கு வசதிகளை செய்துகொடுக்க, சிறந்த உற்பத்தி நடைமுறைகள் (Good Manufacturing Practices (GMP)) மற்றும் சிறந்த சுகாதார நடைமுறைகள் (Good Hygienic Practices (GHP)) ஆகியவற்றின் சான்றிதழை ஈரான் எதிர்பார்க்கிறது, இது தேயிலைக்கான இறுதி தயாரிப்பை உற்பத்தி செய்வதற்கும், செயலாக்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
எனவே, ஈரானுக்கு ஏற்றுமதி செய்யும் அனைத்து தேயிலை ஏற்றுமதியாளர்களிடமிருந்தும் தரச் சான்றிதழை ஈரான் அரசாங்கம் கோருகிறது. இந்தச் சான்றிதழ் கட்டாயமானது மற்றும் அந்தந்த தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளின் உச்ச அரச அமைப்பால் வழங்கப்படுவது அத்தியாவசியமானதாகும். புதிய GMP சான்றிதழ்களை வழங்குதல் மற்றும் பழைய GMP சான்றிதழ்களை புதுப்பித்தல் போன்ற ஆவணங்களை சமர்ப்பித்த பின்னரே ஈரானால் பரிசீலிக்கப்படும். எனவே, இலங்கை தேயிலை சபை (SLTB) ஆர்வமுள்ள ஏற்றுமதியாளர்கள் ஈரானுக்கு சமர்ப்பிப்பதற்கான தர சான்றிதழை விண்ணப்பிக்கவும் பெறவும் உதவும் ஒரு செயன்முறையை ஆரம்பித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், ஏற்றுமதிக்கு தயாராக உள்ள இறுதி தேயிலை தயாரிப்பு தொடர்பாக ஈரானில் இருந்து GMPக்கான தகுதியை செயற்படுத்தும் மூன்றாம் தரப்பு சான்றிதழை வழங்குவது இலங்கை தேயிலை சபையின் பணியாகும். கலத்தல், களஞ்சியப்படுத்தல் மற்றும் பொதி செய்தல் தொடர்பான விரிவான பரிசோதனை செயன்முறையை மேற்கொண்ட பின்னர், தேயிலைக்கான தேசிய மற்றும் சர்வதேச தரங்களுக்கு அமைய வழிநடத்தப்பட்ட உணர்வுசார் பகுப்பாய்வு மற்றும் அறிவியல் பரிசோதனையைப் பயன்படுத்தி இறுதி தயாரிப்பு மதிப்பீடு மேற்கொள்ளப்படும். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சான்றிதழைப் புதுப்பித்தல் வரை நடைபெறும் வருடாந்த அவதானிப்புக் கணக்காய்வை மேற்கொள்வதானது, இலங்கை தேயிலை கைத்தொழிலின் சிலோன் தேயிலைக்கு சர்வதேச நம்பிக்கையைப் பெற்றுத் தருவதற்கு வழிவகுக்கும்.
இந்தத் திட்டம் முற்றாக தொண்டர் அடிப்படையிலானதாகும் என்பதுடன், இலங்கை தேயிலை சபை குறிப்பிட்ட தேயிலை ஏற்றுமதியாளரின் கோரிக்கையின் பேரில் மட்டுமே பரிசோதனைகளை மேற்கொள்வதுடன், முன் திட்டமிடப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் நிபுணத்துவத்தை ஏற்பாடு செய்து, உரிய தரநியமங்களைப் பயன்படுத்தி கணக்காய்வு மேற்கொள்ளப்படும். சான்றிதழை வழங்குவதற்கு முன்பும் அதன் பிறகு சான்றிதழ்களை வழங்குவதற்கும் முன் பின்பற்றப்பட்ட செயன்முறை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணங்களின் தொகுப்பு மூலம் விபரிக்கப்படுகின்றது. இந்தத் திட்டம் இலங்கையில் தயார் செய்யப்பட்ட தேயிலைக்கு சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் தரப்பு தரச் சான்றிதழை வழங்குகிறது.



