இலங்கை தேயிலை சபையின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் புள்ளிவிபரப் பிரிவின் பிரதான நோக்கம், இலங்கையில் தேயிலைத் தொழிலில் ஈடுபட்டுள்ள அல்லது ஆர்வமுள்ள எவருக்கும் தொடர்புடைய விரிவான, நம்பகமான மற்றும் இற்றைப்படுத்தப்பட்ட தகவல்களை அணுகுவதற்குரிய தனியான, வசதியான மையமாக செயற்படுவதாகும்.
இப்பிரிவானது தேயிலை வளர்ப்பாளர், உற்பத்தியாளர் மற்றும் சந்தைத் தகவல்களை சபையின் ஏழு பிராந்திய அலுவலகங்கள், ஒவ்வொன்றும் இலங்கையின் ஏழு தேயிலை வளரும் ‘மாவட்டங்களில்’ ஒன்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. கொழும்பு மற்றும் லண்டன் தேயிலை ஏலதாரர்கள், இலங்கை வர்த்தக சம்மேளனம் மற்றும், சபையின் மற்ற பிரிவுகள் உட்பட பல்வேறு ஆதாரங்களின் மூலம் சேகரிக்கிறது. சபையின் உள்ளக தரவு வலையமைப்பு மூலம் பிராந்திய அலுவலகங்களில் இருந்து வழக்கமான தகவல்கள் இற்றைப்படுத்தப்படும்.
மேலும், இலங்கை தேயிலை சபை இணை உறுப்பினராக உள்ள சர்வதேச தேயிலை குழுவுடன் இப்பிரிவு தகவல்களை பரிமாற்றம் செய்துகொள்கின்றது.
தகவல் தொழிநுட்பப் பிரிவினால் சேகரிக்கப்பட்ட மற்றும் பகுப்பாய்வு செய்யப்பட்ட தகவல்கள் மாதாந்த, காலாண்டு மற்றும் வருடாந்திர அறிக்கைகளின் தொடராக வெளியிடப்படுகின்றன. இவை இலங்கையின் தேயிலை கைத்தொழில்துறை முழுவதும் விநியோகிக்கப்படுவதுடன் இணையத்திலும் கிடைக்கின்றன. இவற்றிற்கு மேலதிகமாக, இப்பிரிவானது உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் விற்பனை பற்றிய தகவல்களைக் கொண்ட தேயிலை மதுறையின் தரவுக் களஞ்சியத்தையும் இப்பிரிவு பேணிவருகின்றது.
ஒரு நூற்றாண்டுக்கும் மேலான பழைமைவாய்ந்த தேயிலை தொடர்பான அறிக்கைகள் மற்றும் பிற ஆவணங்களின் வடிவத்தில் பெறுமதியான வரலாற்றுத் தகவல்கள் சரியான நேரத்தில் கைத்தொழில் மற்றும் சந்தை தரவுகள் கூடுதலாக வழங்கப்படுகின்றன. இந்தத் தகவல்களில் பெரும்பாலானவை கொழும்பில் உள்ள சபையின் தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள தேயிலை சபை நூலகத்தில் உடனடியாகக் கிடைக்கும். நூலகத்தில் ஏராளமான புத்தகங்கள் மற்றும் தொழில்நுட்ப மற்றும் பொதுவான பிற வெளியீடுகளும் உள்ளன.
இலங்கை தேயிலை சபையின் இணையத்தளங்களை பராமரித்தல் மற்றும் உரிய நேரத்தில் இற்றைப்படுத்தும் பொறுப்பும் இப்பிரிவுக்கு உண்டு. (www.pureceylontea.com மற்றும் www.srilankeaboard.lk)



